திருச்செந்தூர் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.
தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் உருவாகி வருகிறது. இதன் காரணமாக இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை தொடங்கும்.
இன்று இரவு இராமேஷ்வரம் இராமநாதபுரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் தூத்துக்குடி காயல்பட்டினம் ஆத்தூர் திருச்செந்தூர் கல்லாமொழி குலசேகரன்பட்டினம் மணப்பாடு திசையன்விளை ராதாபுரம் உவரி குட்டம் பெரியதாழை கூடன்குளம் ஆகிய தென் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும்.
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து இடங்களிலுமே இன்று இரவு மழை பெய்யும்.
-Tenkasi Weatherman.