heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

  • time: 2025-10-02

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்ற நிலையில் தென்மேற்கு பருவகாற்றானது தற்போது குஜராத் ராஜஸ்தான் பஞ்சாப் ஹரியானா ஜம்மு காஷ்மீர் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில்  பின் வாங்கியுள்ளது. 

அதன் பின்னர் மத்திய இந்தியா மற்றும் தென் மாநிலங்களில் அக்டோபர் 20 ம்தேதிக்குள் முற்றிலுமாக தென்மேற்கு பருவகாற்று விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை கோவை மாவட்டம் சின்னகல்லாறு பகுதிகளில் 4355 மிமீ மழை பதிவாகியுள்ளது.  மேலும் விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி நெல்லை இராமநாதபுரம் மதுரை திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பற்றாக்குறையும் நிலவியது. 


இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் கடந்த 122 நாட்களாக மழை பதிவாகாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் மழை பெய்வதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.  

தற்போது தென்மேற்கு பருவகாற்றும் வலுகுறைந்துள்ளதால் இரு திசை காற்று சந்திப்பு தமிழகத்தில் ஏற்பட உள்ளது. அதாவது காற்று முறிவு காரணமாகவும் இரு திசை காற்று சந்திப்பு காரணமாகவும் நாளை முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். 

அக்டோபர் 3,4,5 ஆகிய மூன்று நாட்களை பொறுத்தவரை மதுரை திண்டுக்கல் இராமநாதபுரம் தேனி சிவகங்கை புதுக்கோடை விருதுநகர் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய 11 தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் மழை பதிவாகவில்லை என்றாலும் அதற்கு அடுத்த நாள் மழை பெய்யாத பகுதிகளிலும் மழை பெய்யும். 

குறிப்பாக அக்டோபர் 6 ம்தேதிக்குள் அனைத்து தென் மாவட்டங்களிலும் கனமழை உறுதி. குறிப்பாக நீண்ட நாட்கள் மழை பெய்யாத நெல்லை தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் சிவகாசி அருப்புக்கோட்டை கோவில்பட்டி எட்டயபுரம் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் சங்கரன்கோவில் சிவகிரி புளியங்குடி வாசுதேவநல்லூர் கயத்தாறு உசிலம்பட்டி எழுமலை பேரையூர் வாடிப்பட்டி மதுரை மாநகர் திருமங்கலம் சிவகங்கை இடையன்குடி கமுதி பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை எதிர்பார்க்கலாம். 

எனவே தென் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம். அக்டோபர் 6 ம்தேதிக்குள்ளாக ஒட்டுமொத்த தென் பகுதியும் நல்ல மழை பெறும். இந்த மழையானது பொதுவாக மாலை இரவு நேரத்தில் மட்டுமே பெய்யும். 

மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும் இடி மின்னலும் வலுவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மழையின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்குமாறு நமது வானிலை பக்கத்தின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

  • time: 2025-06-10

(Posted on 10-06-2025 )தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை 

தற்போது ஆந்திரா ஒரிசா ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் புதிய காற்று சுழற்சி  உருவாகியுள்ளது. இக்காற்று சுழற்சி தென்மேற்கு திசையில் இருந்து வலுவான ஈரப்பதம் மிக்க அரபிக்கடல் காற்றை  மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுப்பதன் காரணமாக ஜூன் 12 ம்தேதி முதல்  கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை  தீவிரமடையும். 
 
ஜூன் 12 ம்தேதி முதல் கோவை  நீலகிரி மாவட்டங்களில் தொடர்மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.  பிற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை பொறுத்தவரை நாங்குநேரி அம்பாசமுத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர்  கொடைக்கானல் வால்பாறை பொள்ளாச்சி  ஆகிய 8 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். 

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை :   தென்காசியில் தொடர்   மழை பெய்யும் என்பதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும்  வெள்ளப்பெருக்கு ஏற்படும். குறிப்பாக ஜுன் 14,15 ஆகிய தேதிகளில் குற்றால அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. குற்றாலம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். பாபநாசம் முல்லை நீர்பிடிப்பு பகுதிகள் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். 

மலைப்பகுதிகளுக்கு செல்ல தடை : 

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது அதனால் மாஞ்சோலை வால்பாறை நீலகிரி ஆகிய மலை வாழிடங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்  செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். மேலும் ஆற்றங்கரையோரம் மற்றும் நீர்நிலைகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம். 

மீனவர்களுக்கான  எச்சரிக்கை :

வலுவான தென்மேற்கு திசை வீசும் என்பதால்  அரபிக்கடல் கேரளா கர்நாடக கடலோர பகுதிகள் லட்சத்தீவுகள் மத்திய மற்றும் தெற்கு வங்ககடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிகடல் பகுதிக்கு மீனவர்கள்  மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

பலத்த காற்று எச்சரிக்கை : தென்மேற்கு பருவகாற்று வலுவடைந்துள்ளதால் தென் மாவட்டங்களில் மணிக்கு 60  கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.  ஆரல்வாய்மொழி கணவாய் செங்கோட்டை கணவாய் அச்சன்கோவில் கணவாய் ஆண்டிப்பட்டி மற்றும் பாலக்காட்டு கணவாய் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும். 

அணைகளின் நிலவரம் எப்படி?

தென்மேற்கு பருவமழை தீவிரமடைய இருப்பதால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த சுற்று மழையால் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெரும்பாலான அணைகள் நிரம்ப வாய்ப்பு. குறிப்பாக பாபநாசம் சேர்வலாறு கடனாநதி ராமநதி கருப்பாநதி அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவமழை எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

ஜுன் 12 ம்தேதி தொடங்கும் பருவமழையானது ஜுன் 14,15 ம்தேதிகளில் மிக  தீவிரமடையும் .  குமரி நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதுமே மழை பெய்யும். பிற மாவட்டங்களை பொறுத்தவரை நாங்குநேரி அம்பாசமுத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர்  கொடைக்கானல் வால்பாறை பொள்ளாச்சி  ஆகிய 8 தாலுகாவில் மட்டும் நல்ல மழை பெய்யும். பிற மலையோர பகுதிகளான புளியங்குடி வாசுதேவநல்லூர் சிவகிரி இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்பம் தேனி கோயம்புத்தூர் மாநகர் ஆகிய இடங்களில்  மிதமான  மழை விட்டு விட்டு பெய்யும்.

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை

  • time: 2025-06-09

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை 

அரபிக்கடலில் இருந்து ஈரப்பதமான காற்றானது தமிழகம் ஊடாக செல்வதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வெப்பசலன மழை தீவிரமடைய உள்ளது. 

நாளை ஜுன் 10 ம்தேதி மாலை இரவு நேரங்களில்  தூத்துக்குடி விருதுநகர் இராமநாதபுரம் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை வேலூர் திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

ஜூன் 11 ம்தேதி வட தமிழக மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். குறிப்பாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் இராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். அரியலூர் பெரம்பலூர் திருச்சி தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். 

ஜூன் 12 ம்தேதியும் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக ஜுன் 10,11,12 ஆகிய தேதிகளில் சேலம் வேலூர் திருப்பத்தூர் இராணிப்பேட்டை தர்மபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் அதிகமழையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

கன்னியாகுமரி நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-05-02

கன்னியாகுமரி நீலகிரி கனமழைக்கு வாய்ப்பு 

காற்று முறிவு காரணமாக இன்று கன்னியாகுமரி நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை பொள்ளாச்சி கிணத்துகடவு சின்னகல்லாறு சோலையாறு  ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். குமுளி தேக்கடி மாஞ்சோலையில் மிதமான மழை பெய்யும்.

தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை ஆகிய தென்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு 

கேரளா மாநிலத்தை பொறுத்தவரை இன்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை எர்ணாகுளம் திரிசூர் கோழிக்கோடு கண்ணூர் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-04-26

தென் மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை 

தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் மதுரை விருதுநகர் தேனி சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். 
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மிக கனமழையை பொறுத்தவரை கன்னியாகுமரி நெல்லை தென்காசி விருதுநகர் மேற்கு ஆகிய 4 மாவட்டங்களில் பரவலாக இன்று மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் மாஞ்சோலை கோதையாறு சிவகிரி புளியங்குடி இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு களக்காடு நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. 

தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-04-06

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு .

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது.

இன்று பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்த நிலையில் கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி தூத்துக்குடி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலான மழை பெய்யும். 

நாளை முதல் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும். அதே வேளையில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை  தென்காசி கோவை நீலகிரி மாவட்ட மலையோர கிராங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். வங்க கடல் காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் மேற்கு திசை காற்று தற்காலிகமாக வீச துவங்கும். 

வெப்பம் அதிகரித்தால் மழை பொழியுமா? 

வெப்பம் அதிகரித்தாலே மழை பொழியும் என்று நாம் நினைக்க கூடாது
வானிலையை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வைத்து கணித்து விட முடியாது. சுற்றுசூழல் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், இவற்றின் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் என பல்வேறு காரணிகளை பொறுத்துதான் வானிலையின் இறுதி முடிவு கிடைக்கும்.”

-Tenkasi Weatherman