தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
குமரி கடலில் காற்று சுழற்சி உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் 48 மணி நேரத்தில் காற்று சுழற்சி உருவாகும். இந்த புதிய காற்று சுழற்சி தென் தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கும் என்பதால் தமிழகத்தில் கோடைமழை தீவிரமடையும்.
இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான இராமநாதபுரம் விருதுநகர் மதுரை திண்டுக்கல் தேனி தென்காசி நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நெல்லை மலைப்பகுதிகளான பாபநாசம் முண்டந்துறை மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதிகளிலும் கனமழை பதிவாகும்.
இன்று நாமக்கல் சேலம் திருச்சி கரூர் தர்மபுரி கிருஷ்ணகிரி நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கொடைகானல் வால்பாறை கூடலூர் நீலகிரி மலைப்பகுதிகளிலும் இன்று மழை எதிர்பார்க்கலாம்.
புதிய காற்று சுழற்சி கிழக்கு திசை காற்று வீசும்.
குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாக இருப்பதால் மே 13 ம்தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். வரும் வாரத்தில் குற்றால அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
தமிழக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பாபநாசம் மணிமுத்தாறு முல்லை பெரியார் வைகை உள்ளிட்ட தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
-Tenkasi Weatherman.