Back
temple-details

தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2025-04-06

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு .

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது.

இன்று பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்த நிலையில் கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி தூத்துக்குடி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலான மழை பெய்யும். 

நாளை முதல் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும். அதே வேளையில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை  தென்காசி கோவை நீலகிரி மாவட்ட மலையோர கிராங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். வங்க கடல் காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் மேற்கு திசை காற்று தற்காலிகமாக வீச துவங்கும். 

வெப்பம் அதிகரித்தால் மழை பொழியுமா? 

வெப்பம் அதிகரித்தாலே மழை பொழியும் என்று நாம் நினைக்க கூடாது
வானிலையை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வைத்து கணித்து விட முடியாது. சுற்றுசூழல் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், இவற்றின் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் என பல்வேறு காரணிகளை பொறுத்துதான் வானிலையின் இறுதி முடிவு கிடைக்கும்.”

-Tenkasi Weatherman

Write Reviews

0 reviews