Back
temple-details

நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time : 2025-04-26

தென் மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை 

தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் மதுரை விருதுநகர் தேனி சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். 
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மிக கனமழையை பொறுத்தவரை கன்னியாகுமரி நெல்லை தென்காசி விருதுநகர் மேற்கு ஆகிய 4 மாவட்டங்களில் பரவலாக இன்று மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் மாஞ்சோலை கோதையாறு சிவகிரி புளியங்குடி இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு களக்காடு நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. 

தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews