தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
அரபிக்கடலில் இருந்து ஈரப்பதமான காற்றானது தமிழகம் ஊடாக செல்வதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வெப்பசலன மழை தீவிரமடைய உள்ளது.
நாளை ஜுன் 10 ம்தேதி மாலை இரவு நேரங்களில் தூத்துக்குடி விருதுநகர் இராமநாதபுரம் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை வேலூர் திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
ஜூன் 11 ம்தேதி வட தமிழக மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். குறிப்பாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் இராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். அரியலூர் பெரம்பலூர் திருச்சி தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும்.
ஜூன் 12 ம்தேதியும் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக ஜுன் 10,11,12 ஆகிய தேதிகளில் சேலம் வேலூர் திருப்பத்தூர் இராணிப்பேட்டை தர்மபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் அதிகமழையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-Tenkasi Weatherman.