Back
temple-details

கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2025-05-29

தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை 

வடமேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடல் ஈரப்பதத்தை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக வலுவாக இழுப்பதன் காரணமாக இன்று கேரளா கர்நாடகா மகராஷ்டிரா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருவமழை மிக தீவிரமடையும். 

இன்று மற்றும் நாளை கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகும். கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி கோவை நீலகிரி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்களை பொறுத்தவரை கன்னியாகுமரி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று முதல் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மாஞ்சோலை கோதையாறு புளியரை செங்கோட்டை ஆகிய இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். அடுத்த 2 நாட்கள் பெய்யும் மழையால் தமிழக அணைகள் வேகமாக நிரம்பும் நிலையை எட்டும்.


தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைவதால் பாபநாசம் குற்றாலம் மூணாறு வால்பாறை ஊட்டி ஆகிய மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். 

Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews