heavy-rainfall-alert

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-03-09

தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை


தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான  காற்று சுழற்சி தற்போது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகர்வதால் மார்ச் 11 ம்தேதி முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 11 ம்தேதி தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர்  தஞ்சை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை  ஆகிய 10 மாவட்டங்களில்  இடி மின்னலுடன்  கனமழை பெய்யும். மேலும் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.

மார்ச் 12 ம்தேதியை பொறுத்தவரை நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

அதிகமழையை பெறும் தென் மாவட்டங்கள் :

மார்ச் 11 ம்தேதியை பொறுத்தவரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் .குறிப்பாக அன்றைய நாளில் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும் இடி மின்னலும் வலுவாக இருக்கும். குற்றால அருவிகள் களைகட்டும். பாபநாசம் மணிமுத்தாறு உட்பட தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-03-07

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் மார்ச் 11 ம்தேதி முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 11 ம்தேதி தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன்  கனமழை பெய்யும். மேலும் விருதுநகர் மதுரை தேனி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

மார்ச் 12 ம்தேதி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

தென் மாவட்டங்களை பொறுத்தவரை மீண்டும் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் தங்கள் அறுவடைப்பணிகளை மார்ச் 10 ம் தேதிக்குள் முடித்து கொள்ளவும். மேலும் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும். 

குற்றாலம் மீண்டும் களைகட்டும் : கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து இருக்கும். மார்ச் 11 ம்தேதி மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் 11,12 ம்தேதிகளில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. 


இடி மின்னல் அதிகரிக்கும். : மார்ச் 11 ம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்யும் மழையின் போது இடி மின்னல் வலுவாக இருக்கும் தரைக்காற்றும் பலமாக வீசும். 

தென் மாவட்ட மக்களே இது உங்களுக்கான காலம் கோடைகாலத்தில் ஒரு மழைகாலம் நன்றாக மழையை அனுபவியுங்கள்.

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

சிவந்திப்பட்டியில் கொட்டி தீர்த்த மழை

  • time: 2025-03-02

சிவந்திப்பட்டியில் கொட்டி தீர்த்த மழை 

மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சியானது வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் ஊடாக இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் அடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும். தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மிமீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளம் 117 மிமீ மழையும் ஸ்ரீவைகுண்டம் 106 மிமீ மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும் 17 இடங்களில் கனமழையும் 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு 

நெல்லை மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 1919 கன அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 674 கன அடியாக உள்ளது. 

தென் மாவட்டங்களில் மழை தொடரும் : தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

  • time: 2025-03-01

தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை 

இலங்கை அருகே நீடித்த காற்று சுழற்சியானது இன்று குமரி கடல் அருகே நகர்ந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 

இன்றைய தினம் தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர் சிவகங்கை மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும். 

மதுரை மண்டலத்தை பொறுத்தவரை கொடைக்கானல் மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் பகுதிகளிலும் இன்று மழை கொட்டி தீர்க்கும். நெல்லை மண்டலத்தை பொறுத்தவரை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் நெல்லை தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென்காசி  திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் பகுதிகளிலும் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம். 

குற்றாலம் களைகட்டும் 

நமது வானிலை பக்கம் முன்பே கணித்தப்படி இன்று முதல் குற்றால அருவிகள் களைகட்டும்.மேலும் நெல்லை தென்காசியில்  அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தீவிரமடைகிறது கோடைமழை

  • time: 2025-02-27

தூத்துக்குடியில் மழை அதிகரிக்கும். 

தெற்கு இலங்கை அருகே நீடிக்கும் காற்று சுழற்சியானது குமரி கடல் நோக்கி நகருவதால் இன்று இரவு முதல் தூத்துக்குடி நெல்லை கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும். 

இன்று பகல் நேரத்தை பொறுத்தவரை மாலை நேரங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகும். இன்று இரவு முதல் நாகப்பட்டினம் இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர பகுதிகளில் மழை துவங்கும். குறிப்பாக நாகப்பட்டினம் வேதாரண்யம் வேளாங்கண்ணி தரங்கம்பாடி கோடியக்கரை இராமநாதபுரம் இராமேஷ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் தேவிப்பட்டினம் தூத்துக்குடி ஆத்தூர் காயல்பட்டினம் திருச்செந்தூர் கல்லாமொழி குலசேகரன்பட்டினம் மணப்பாடு பெரியதாழை குட்டம் உவரி கூடன்குளம் ஆகிய இடங்களில் இன்று இரவு நாளை அதிகாலை நேரங்களில் பரவலாக மழை பெய்யும் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

நாளைய தினம்  நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பாபநாசம் மாஞ்சோலை மணிமுத்தாறு நெல்லை மாநகர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மதுரை மாவட்டங்களிலும் நாளை மழை பெய்யும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

நெல்லை தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-02-26

நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு 

 

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள் .இந்த புனித நாளில் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறட்டும். 

தெற்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .

இன்று மாலை இரவு நேரங்களில் திருநெல்வேலி தென்காசி மாவட்டம் முழுவதும் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்யும். குறிப்பாக சிவகிரி வாசுதேவநல்லூர் புளியங்குடி கடையநல்லூர் தென்காசி குற்றாலம் செங்கோட்டை புளியரை பண்பொழி மேக்கரை ஆலங்குளம் விகேபுதூர் சுரண்டை மாறாந்தை பாவூர்சத்திரம் ஆம்பூர் பொட்டல் புதூர் கடையம் ஆழ்வார்குறிச்சி அம்பாசமுத்திரம் விகேபுரம் பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு காரையார் கல்லிடைகுறிச்சி சேரன்மகாதேவி முக்கூடல் பாப்பான்குளம் வீரவநல்லூர் களக்காடு திருக்குறுங்குடி வள்ளியூர் நாங்குநேரி மானூர் தேவர்குளம் கயத்தாறு  உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே இன்று மாலை நேரங்களில் கனமழை பெய்யும். 

குற்றால அருவிகளில் இன்று இரவு முதல் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைகிராமங்களிலும் இன்று  மிக கனமழைக்கு வாய்ப்பு .
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கோதையாறு திங்கள்நகர் தக்கலை குழித்துறை மார்த்தாண்டம் பேச்சிப்பாறை பெருஞ்சாணி பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. 

விருதுநகர் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மழை பெய்யும். .ஸ்ரீவில்லிபுத்தூர் இராமேஷ்வரம் பாம்பன் இராஜபாளையம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

 

நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு 

நெல்லை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்யும். குறிப்பாக பாளையங்கோட்டை சமாதானபுரம் ஹைகிரவுண்ட் வண்ணாரப்பேட்டை டவுண் மேலப்பாளையம் தச்சநல்லூர் சுத்தமல்லி ஆகிய இடங்களில் இன்று மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்யும்.

 

மகாசிவராத்திரியான இன்று தென் தமிழக மக்கள் கோவிலுக்கு செல்லும் போது கையில் குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும். 

-Tenkasi Weatherman.