heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் துவங்கும் மழை

  • time: 2025-02-25

புதிய காற்று சுழற்சி தென் மாவட்டங்களில் தொடங்கும் மழை 

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி நாளை இலங்கை அருகே நகர்ந்து அதன் பின்னர் இக்காற்று சுழற்சி குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று பிப்ரவரி 25 ம்தேதி  இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தென்காசி நெல்லை ஆகிய தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகும் .பிப்ரவரி 26 ம்தேதி நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகும்.குறிப்பாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழை எதிர்பாக்கலாம். 

பிப்ரவரி 27,28 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

நாளை மறுநாள் பிப் 27  முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை சிவகங்கை தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். 

மார்ச் 1 - தென் மாவட்டங்களில் மழை தொடரும். குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. 

Note : காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கோடைமழை துவங்குகிறது. இம்மழை பொதுவாக மாலை இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும். மேலும் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. 

விவசாயிகளுக்கான எச்சரிக்கை 

நமது வானிலை பக்கத்தின் சார்பில் தென் தமிழக மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தங்கள் விவசாய பணிகளை இன்றைக்குள் முடிக்கவும்.

இந்த மழையானது விவசாயிகளுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவே விவசாயிகள் அறுவடைப்பணிகளை துரிதப்படுத்தவும்.மேலும் அறுவடை செய்த மக்காளச்சோளம்  நெல்  உள்ளிட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-02-21

தாகத்தை தீர்க்க வரும் கோடைமழை 

தமிழ்நாட்டில் குளிர்காலம் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் கோடைகாலம் துவங்க உள்ளது. மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டமே தமிழ்நாட்டிற்கு கோடைகாலம் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் .மாநிலத்தில் எங்குமே மழைக்கான வாய்ப்பு இல்லை.

தற்போதைய நிலையில் தமிழகத்தை விட கேரளா மாநிலத்தில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. ஈரப்பதம் இல்லாத வறண்ட கிழக்கு திசை காற்று வீசும் என்பதால் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி தென்காசி தேனி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். 

தமிழகத்தின் உள்மாவட்டங்களான விருதுநகர் மதுரை திருச்சி கரூர் நாமக்கல் வேலூர் திருப்பத்தூர் சேலம் ஆகிய இடங்களிலும் வெயில் அதிகரித்தே காணப்படும். இந்த கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் மழையும் அதிகரித்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இந்தாண்டு கோடைமழை அதிகளவு பெய்யும்.கன்னியாகுமரி தென்காசி நெல்லை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்லமழை பெய்யும். இந்தாண்டு கோடைமழை நல்ல அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மா விளைச்சல் அதிகரிக்கும். மிக விரைவாக மாங்காய் பழுப்பதற்கும் இந்த மழை உதவும்

இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இக்காற்று சுழற்சி இம்மாத இறுதியில்  தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.   

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் தொடர்மழைக்கு வாய்ப்பு

  • time: 2025-01-17

தென் மாவட்டங்களில் தொடர்மழைக்கு வாய்ப்பு 

மழை குறித்து திருக்குறள் :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் : மழை பெய்வதால் தான் உலக உயிர்கள் வாழ்கின்றன என்பதால், மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கது. உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

 

கிழக்கத்திய அலையானது (Easterly Trough) இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் நோக்கி நகருகிறது. இதனால் ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று வலுவாக தென் மாவட்டங்களில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை இரவு முதல் ( ஜன 18) மழை துவங்கும். 


ஜனவரி 19 ம்தேதியை பொறுத்தவரை சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மயிலாடுதுறை தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும்.குறிப்பாக காவிரி  டெல்டா  மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிக்கை

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று தென் மாவட்டங்களில் குவியும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு முதல் தென் கடலோர  மாவட்டங்களில் மழை துவங்கும். குறிப்பாக ஜனவரி 19  ம்தேதி இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். 

Tenkasi Weatherman Special Forecast நெல்லையில் பெருமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தென் தமிழக மலைகளின் மீது மோதும் என்பதால் மணிமுத்தாறு நீர்பிடிப்பு பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் பெருமழைக்கு வாய்ப்பு. ஒரே நாளில் 300 மிமீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே மாஞ்சோலை பகுதியை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

வடகிழக்கு பருவமழை விலக சாத்தியமில்லை:

 1971 முதல் 2024 வரையிலான காலத்தில்  1994 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம்தேதி வடகிழக்கு பருவமழை மிக வேகமாக முன்கூட்டியே விலகியுள்ளது. அதே போல கடந்த 55 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை தாமதமாக விலகிய ஆண்டு 2021. 2021 ம் ஆண்டு வரலாற்றில் மிக தாமதமாக ஜனவரி 19ம் தேதி  பருவமழை விலகியுள்ளது. 
தற்போது அதை முறியடித்து மேலும் தாமதமாக பருவமழை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதால் வானிலையை கண்காணிக்கும் பணி சற்று அதிகரித்துள்ளது. பொங்கல் நாளிலும் வானிலை சேவைகள் தொடர்கிறது. 
வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ள www.tenkasiweatherman.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

-Tenkasi Weatherman 

heavy-rainfall-alert

பொங்கலன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-01-13

பொங்கல் வாழ்த்தும் தமிழக வானிலை அறிவிப்பும் :

தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

 தைஇத் திங்கள் தண்கயம் படியும்” மற்றும் "தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே" என்று நற்றிணை 80 மற்றும் 124ஆம் பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற குறுந்தொகையின் 196வது பாடலிலும், "தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று புறநானூறின் 70வது பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறின் 84 வைத்து பாடலிலும், “தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” என்று கலித்தொகை பாடலிலும் சங்க காலம் தொட்டே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாக சங்க கால தமிழ் இலக்கிய வரலாற்று குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

 

அறுவடைத் திருநாள், உழவர்கள் இயற்கைக்கு படையலிடும் விழா என்றும், சூரியனை வழிபடும் விழா என்றும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் பண்டிகை மாட்டுப் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது. 
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்.கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும் 

தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை -தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  (14-01-2025)(Tenkasi Weatherman Forecast )

பொங்கள் நன்னாளில் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.  குமரி கடல் அருகே நீடிக்கும் காற்று காரணமாக ஈரப்பதம் மிக்க காற்று தென் தமிழகம் ஊடாக வீசுவதால் நாளை (ஜன 14) நெல்லை தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நாளை மழை பெய்யும். குறிப்பாக திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு கனமழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு. 

15-01-2025 (Tenkasi Weatherman Forecast )மாட்டு பொங்கலன்றும் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டத்தில் பரவலான  மழைக்கு வாய்ப்பு . பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ள பகுதிகளில் மாலை இரவு நேர நிகழ்ச்சிகளை மழைக்கேற்றவாறு நடத்தி கொள்ளவும். முக்கியமாக கோலப்போட்டி நடத்த வேண்டாம். 
தென் மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.

பொங்கலன்று இதற்கு முன்பு தென் தமிழகம் மழை பெற்றுள்ளதா?

1991 முதல் 2025 வரையிலான 35 வருட காலத்தில் பொங்கல் திருநாளன்று தென் மாவட்டங்கள் மழை பெறுவது அரிதாக இருந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் 2006,2010,2021 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டுமே நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்கள் பொங்கலன்று மழையை பெற்றிருக்கிறது.  2021 ம் ஆண்டுக்கு பிறகு தற்போதும் பொங்கலன்று நாம் மழையை பெற உள்ளோம். 

தென் தமிழக மக்களே மழையோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடவும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் அதி தீவிர கனமழை எச்சரிக்கை

  • time: 2024-12-12

தென் கடலோர மாவட்டங்களில் அதி தீவிர கனமழை எச்சரிக்கை 

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் நீடிக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து  காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி குமரி கடல் வழியாக அரபிகடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து காணப்படும். குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்திலும் இன்று இரவுமழை பெய்யும்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். பாபநாசம் மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளான செங்கல்தேரி மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதியில் 200 மிமீக்கு மேல் பெருமழை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். 

இம்மழையால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பற்றாக்குறை படிப்படியாக நீங்கும்.
தற்போது மாலை 6.30 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 110 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

இராமேஷ்வரம் திருச்செந்தூர் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-22

கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து காணப்பட்டாலும் கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இன்று நாகப்பட்டினம் மயிலாடுதுறை இராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

 குறிப்பாக மயிலாடுதுறை கோடியக்கரை வேதாரண்யம் தரங்கம்பாடி இராமேஷ்வரம் இராமநாதபுரம் பாம்பன் தங்கச்சிமடம் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் பெரியதாழை குட்டம் உவரி கூடன்குளம் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று இரவு மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்காசி விருதுநகர் மதுரை உள்ளிட்ட பிற தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் மழைக்கு வாய்ப்பு இல்லை.

-Tenkasi Weatherman.