heavy-rainfall-alert

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-17

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மிக அதிகமான நெல்லை மாவட்டம் நாலுமுக்கு 105 மிமீ மழை பதிவாகியுள்ளது.கிழக்கு திசை காற்றின் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் மாஞ்சோலை மலைப்பகுதி 401 மிமீ மழையை பெற்றுள்ளது. 

இன்றைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் மழை குறையும் தென் மாவட்டங்களில் மழை தொடரும் : 

வறண்ட வாடை காற்று தமிழகத்தில் ஊடுறுவதால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி இராணிப்பேட்டை ஆகிய வட மாவட்டங்களில் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும் இதே நிலை அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும். 

 தென் மாவட்டங்களை பொறுத்தவரை இன்று மாலை நேரங்களில் நெல்லை தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். தமிழக கடலோர பகுதியை பொறுத்தவரை கடலூர் விழுப்புரம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.


அரியலூர் பெரம்பலூர் விருதுநகர்  மதுரை சிவகங்கை ஆகிய உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

தற்போது பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உவரி கூடன்குளம் ஆகிய இடங்களில் இன்று இரவு  கனமழை பெய்யும். 

நெல்லை மலைப்பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

-Tenkasi Weatherman. 

நமது வாட்சப் குழுவில் இணைய விரும்பும் மக்கள் தங்கள் ஊர் பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றின் விவரங்களை 9443687841 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும். 

For More updates : www.tenkasiweatherman.com

heavy-rainfall-alert

மாஞ்சோலையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-16

தென் தமிழக மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி  ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். பொதுவாக கடலோர பகுதி என்றாலே இரவு அதிகாலை நேரங்களில் மட்டுமே மழை பெய்யும். 
 
மேலும் இன்று மாலை  அரியலூர் பெரம்பலூர் திருச்சி சிவகங்கை விருதுநகர் தென்காசி
தேனி திண்டுக்கல் கோவை நீலகிரி மதுரை ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிவிப்பு :

தென் மாவட்டங்களை பொறுத்தவரை மாஞ்சோலை மலைப்பகுதி தமிழக அளவில் அதிகமழையை பெற்று வருகிறது. இன்றும்  தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். தென்காசி மாவட்டத்தில் இன்று வலுவான மழை பெய்யும். 

நெல்லை மாவட்டத்தில் இன்றும் பரவலாக மழை பதிவாகும். மாவட்டத்தின் மலைப்பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யும்.  

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் இன்று இரவு நள்ளிரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு விருதுநகர் மாவட்டத்திலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. 

-Tenkasi Weatherman. 

 

மழை மழையாகவே இருக்கிறது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை என்பது ஒரு சாதாரண வானிலை நிகழ்வு அல்ல அது நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய விலைமதிப்பற்ற வளமாகும்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
மழை
மழையாகவே இருக்கிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
உன் மீதான காதல் ஈரமாய்
அப்படியே இருக்கிறது

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

டெல்டா தென் தமிழக மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time: 2024-11-15

தென் மாவட்டங்களில் மழை தொடரும்

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைகாற்று காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று இரவு தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று இரவு தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களிலும் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் வலுவான மழை மேகங்கள் உருவாகும் இதனால் நெல்லை தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் உவரி ஆகிய கடலோர பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும்.

 

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைகிராமங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

  • time: 2024-11-08

தெற்கு கடலோர மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வரும் மணி நேரங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று நெல்லை தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து கோதையாறு செங்கோட்டை மேக்கரை ஆகிய மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கிழக்கு கடற்கரை சமவெளி பகுதிகளான இராமநாதபுரம் இராமேஷ்வரம் பாம்பன் தங்கச்சிமடம் தூத்துக்குடி ஆத்தூர் காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் மணப்பாடு உவரி கூடன்குளம் ராதாபுரம் திசையன்விளை ஆகிய கடலோர பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு குமரி மாவட்டத்திலும் இன்று மழை தொடரும். 

இன்று மாலை முதல் இராமநாதபுரம் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் 

Note : தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டுமே மழை பெய்யும். நாளை முதல் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

தென் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-02

(Posted on 02-10-2024 )கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மிக கனமழை 

இன்று கன்னியாகுமரி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் இன்று கனமழை பதிவாகியுள்ளது

தற்போது மாலை 4.30 மணி நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு : 

தற்போது இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் உருவாகிறது. இம்மேங்கள் அடுத்த சில மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று நள்ளிரவு நாளை அதிகாலை நேரங்களில் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யும். 

இராமேஷ்வரம் பாம்பன் தங்கச்சிமடம் மண்டபம் வைப்பார் தூத்துக்குடி ஆத்தூர்  காயல்பட்டினம்  திருச்செந்தூர் உடன்குடி குலசேகரன்பட்டினம் மணப்பாடு குட்டம் பெரியதாழை சாத்தான்குளம் உவரி திசையன்விளை ராதாபுரம் கூடன்குளம் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழை பெய்யும் . ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-01

(Posted on 01-11-2024 ) நெல்லை குமரி தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை  எச்சரிக்கை 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில்  கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்று சந்திப்பு ஏற்பட்டுள்ளது. இரு திசை காற்று சந்திப்பு காரணமாக தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? 
தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் இராமநாதபுரம் மதுரை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நீலகிரி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 
தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர்  சேலம் நாமக்கல் கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரவலான மழை பெய்யும்.


மிக கனமழையை பொறுத்தவரை தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பதிவாகும்.  

கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களுக்கு இன்று மிக சிறந்த மழை காலமாக அமையும். தூத்துக்குடி நெல்லை தென்காசி குமரி மாவட்ட மக்கள் மழையை ரசிக்க தயாராகவும். இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களிலும் இன்று சிறப்பான மழை உண்டு. 

இன்று மாலை இரவு  நேரங்களில் தென் தமிழக மக்கள் வெளியே செல்லும் போது ரெயின் கோட் குடையுடன் செல்லுங்கள். இடி மின்னலின் போது திறந்த வெளியில் நிற்க வேண்டாம். 

-Tenkasi Weatherman.